அழகு குறிப்புகள் # 85 - வீட்டிலேயே ஈசியாக செய்யக்கூடிய மழைக் காலத்திற்கான 3 சருமப் பராமரிப்புகள்
சீசன் மாறும் போது நம் சருமமும் அதன் மாற்றங்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே அந்த அந்த காலத்திற்கு ஏற்ப சருமத்தை பராமரிப்பது அவசியம்.
பருவ மழைக்காலமான இந்த நாட்களில், உங்களை நீங்களே வீட்டில் இருந்து பராமரித்துக் கொள்ள சில ஈசி வழிமுறைகள் இதோ:
கடலை மாவு – மஞ்சள் மேஜிக்
கடலை மாவு இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். இப்போது இதில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த பேஸ்டை உங்கள் முகத்திலும் கழுத்திலும் தடவவும். சுமார் 10-15 நிமிடங்கள் அதை விட்டு விடுங்கள். பின்னர் சிறிது பன்னீர் பயன்படுத்தி மெதுவாக கழுவவும்.
மாதுளை – ஓட்ஸ் ஸ்பெஷல்ஸ்
மாதுளை விதைகளில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி போன்ற வயதாவதை எதிர்க்கும் சக்தி இருக்கின்றன. அவை வறண்ட சருமத்தை சரி செய்ய உதவுகின்றன.
இரண்டு டேபிள் ஸ்பூன் மாதுளை விதைகளையும் ஒரு கப் ஓட்ஸையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் மோர் சேர்க்கவும். உங்கள் முகத்தில் சில நிமிடங்கள் தடவவும். பின்னர் கழுவி விடவும்.
இது பழைய சரும செல்களை அகற்ற உதவுகிறது மற்றும் சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
முட்டை – தேன் கவனிப்பு
ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீ ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு மூன்று சொட்டு எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து முகத்தில் தடவவும்; அது 15 நிமிடங்கள் இருக்கட்டும், பின்னர் கழுவவும்.
எலுமிச்சை சாறு இயல்பான நிறத்தைக் கொடுக்கும். முட்டையின் வெள்ளை சருமத்தை இறுக்குகிறது மற்றும் தேன் ஈரப்பதமாக்கி சருமத்தை சரி செய்யும்.