(Reading time: 2 - 4 minutes)

அழகு குறிப்புகள் # 88 - கைகளில் தோல் உரிவதை தடுக்க உதவும் இயற்கை வழிமுறைகள்

கைகளில் தோல் உரிவதற்கு வறண்டு உலர்ந்த சருமம், எக்ஸிமா, வெயில், சொரியாசிஸ், அடிக்கடி கை கழுவுதல், கடுமையான இரசாயனங்கள் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துதல், குளிர் காலம், அலர்ஜி என பலக் காரணங்கள் உள்ளன.

  

உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் அதை சீர் செய்ய சில வழிமுறைகள் இங்கே:

   

வைட்டமின் ஈ எண்ணெய் மசாஜ்

உங்கள் கைகளை வெதுவெதுப்பான நீரில் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்து இருந்து, பின்னர் காய வைக்கவும். கைகளை உலர வைக்க மென்மையான துணியைப் பயன்படுத்தவும்.

  

பின்னர் உங்கள் கைகளை மசாஜ் செய்ய வைட்டமின் ஈ எண்ணெயைப் பயன்படுத்தவும்.

  

வைட்டமின் ஈ உங்கள் கைகளை நீண்ட நேரம் ஈரப்பதமாக வைத்திருக்கும்.

  

நீங்கள் ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது உங்களை இயற்கையான முறையில் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

   

ஓட்ஸ்

சிறிது ஓட்ஸை எடுத்து, வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.

  

ஓட்ஸ் மென்மையானதும், ​​உங்கள் கைகளை ஓட்ஸ் இருக்கும் கிண்ணத்தின் உள்ளே 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும்.

 

அதன் பிறகு, உங்கள் கைகளை சுத்தமான தண்ணீரில் கழுவி உலர வைக்கவும். லேசான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.

  

உங்களுக்கு தோல் உரியும் பிரச்சனை அதிகமாக இருந்தால், இது தினமும் செய்யலாம்.

  

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் உங்கள் கைகளில் தோல் உரிவதை நிறுத்துவதுடன், அதை மென்மையாகவும், அழகாகவும் மாற்ற உதவும்.

  

ஒரு வெள்ளரியை தடிமனான துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

  

அதை உங்கள் கைகளில் தேய்த்து, வரும் சாறை உங்கள் கைகளில் 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு வையுங்கள்.

  

பிறகு வெதுவெதுப்பான நீரில் கைகளைக் கழுவி, வைட்டமின் ஈ எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்யவும்.

  

அலோ வேரா

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் கற்றாழை சாற்றைக் கொண்டு கையை மசாஜ் செய்யுங்கள்.

 

காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவவும்.

 

மேலே மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.

  

 

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.