Health Tip # 84 - ஆரோக்கிய குறிப்புகள் - சசிரேகா
அஜீரணம் போக்க சமையலில் இஞ்சி பூண்டு தாராளமாக சேர்க்க வேண்டும் வெற்றிலையும் பயனளிக்கும்
எண்ணெய் தேய்த்து குளித்தப்பிறகு தேங்காய், கீரை, உளுந்து, புளி, தயிர் தவிர்ப்பது நல்லது
முருங்கை, கேரட், பப்பாளி இவை கண்களுக்கு நல்லது
தேங்காய் பாலுடன் வெண்ணெய் கலந்து தினமும் சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்
நம் உடலில் உள்ள நோயை விரட்ட ஒரே வைத்தியம் எண்ணெய் வைத்தியம்தான் காலையில் எழுந்ததும் பல் துலக்கிய உடன் நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், வேர்க்கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெயில் ஏதோ ஒரு எண்ணெயை இரண்டு தேக்கரண்டி வாயில் விட்டு வாய் முழுவதும் திரியும் படி 15 முதல் 20 நிமிடம் வரை வைத்திருந்து கொப்பளித்தால் எண்ணெய் தன்மை நீர்த்துப் போய் நுரைத்து வெண்மையாகி விடும் பிறகு உமிழ்ந்து விட வேண்டும் இதனால் தீய கொடிய கிருமிகளையும் நுண்ணியிர்களையும் அழித்து உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்தும்
வெள்ளரிக்காய் சாப்பிட்டால் சிறுநீரில் உள்ள கல்லை போக்கும் மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு, இருமல், தொண்டைக்கட்டு, தொண்டைப்புண், ரத்த சோகை, மூல நோய், ரத்த அழுத்தம், உடலுக்கு குளிர்ச்சி, தாகத்தை தணிக்கும் தோலுக்கு பளப்பளப்பை ஏற்படுத்தும்
கட்டி, பழுத்தப் புண் மீது பூண்டு மஞ்சளுடன் அரைத்து அதன் மேல் பற்று போட கட்டி உடைந்துவிடும்
தேள் கொட்டியவர்களை தும்பை இலையை சாப்பிட செய்தால் விஷம் உடனே முறியும்
ஆஸ்துமா நோயாளிகள் வெள்ளைப் பூண்டை நசுக்கி அதன் சாற்றை மூக்கில் வைத்து உறிஞ்சினால் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவது மட்டுப்படும் குறையும்
தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வர ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் நீங்கும் மாரடைப்பை தவிர்க்கலாம்