இந்த சுயப் பரிசோதனை தான் ஜெயஸ்ரீயை தனி ஒரு வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றது.
எஞ்சினியர் எனும் முகமூடியை மாற்றி கிரெசெண்டோ கம்யூனிகேஷன்ஸ் என்ற கம்பெனியில் மார்க்கெட்டிங் துறையின் வைஸ் ப்ரேசிடன்ட் ஆக சேர்ந்தார் ஜெயஸ்ரீ.
அங்கே இருந்து அவரின் வாழ்க்கையில் அனைத்தும் ஏறுமுகமாகவே இருந்தது. கிரெசெண்டோவை சிஸ்கோ எனும் பெரிய பன்னாட்டு நிறுவனம் கைப்பற்றியது. சிஸ்கோவின் நெட்வொர்க் பொருட்களின் வளர்ச்சிக்கு ஜெயஸ்ரீயின் உழைப்பும் ஒரு முக்கிய காரணம்.
15 ஆண்டுகளுக்கு மேல் சிஸ்கோவில் வேலை செய்த ஜெயஸ்ரீ 2008 ஆம் ஆண்டில் அரிஸ்டா நெட்வொர்க்ஸ் என்ற புதிய கம்பெனியின் சீ.ஈ.ஒ ஆக இணைந்தார்.
இன்று 2.4 பில்லியன் மதிப்பான அந்த கம்பெனியின் சீ.ஈ.ஓ ஆக தொடர்கிறார்.
ஜெயஸ்ரீ வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது!
நம் உண்மையான திறமை என்ன என்பதை நம்மை நாமே சுயப் பரிசோதனை செய்து தெரிந்துக் கொள்ள வேண்டும்!
நமக்கு எது பிடிக்குமோ அதையே தொடர வேண்டும்.
இதெல்லாம் பெண்களுக்கான துறை இல்லை. இது பெண்களுக்கு ஏற்ற சரியான வேலை இல்லை என மற்றவர்கள் சொல்லும் விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளாமல் அதை எதிர்த்து சவால் விடலாம் தவறில்லை!
உங்களுக்கு பிடித்த துறையில் முழு மனதோடு வேலை செய்யுங்கள்!
துணிந்து நின்று முயற்சி செய்தால், நீங்களும் நாளை இன்னொரு ஜெயஸ்ரீ உள்ளால் ஆகலாம்!