03. பண்டிகைகளை அறிவோம் - ஆயுத பூஜை
ஆயுத பூஜை என நாம் கொண்டாடும் இன்றைய நாளுக்கு அந்த பெயர் எப்படி வந்தது என சொல்லப்படும் ஒரு செவி வழி வரலாற்று கதை இது.
பஞ்ச பாண்டவர்கள் சகுனியிடம் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்றது நமக்கு தெரிந்த கதை தான்.
அப்படி நாடு இழந்து, பெருமை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னி மர பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.
14 வருட வனவாசத்திற்கு பிறகு நாடு திரும்பிய பாண்டவர்கள், அதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உபயோகித்த அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர்.
அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர்.
பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
02. பண்டிகைகளை அறிவோம் - கொல்லங்கோடு தூக்கம் திருவிழா
உங்களுக்கு தெரிந்த இது போன்ற பண்டிகை / விழாக்களையும் கூட பகிரலாம் பிரென்ட்ஸ்.
நீங்கள் சொல்ல விரும்பும் விழாவை பற்றி எழுதி எங்களுக்கு
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
{kunena_discuss:747}