(Reading time: 3 - 5 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 10 - நித்தமும் உன் நினைவில் - மனோரம்யா

பகிர்ந்தவர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

nithamum-un-ninaivil

திக நெளிவு சுளிவுகளை இல்லாமல் இயல்பாக தொடங்கி பட காட்சிகளில் நம்மை ரசனையுடன் புன்னகைக்க வைக்கும் கதைக்களம். அப்பா, அம்மா , அண்ணி , அண்ணனின் மகள், அத்தை மகன் என அனைவருமே பாசம் பாராட்ட அவர்களின் அன்பு மழையில் நனையும் நாயகியாய் மனதில் இடம் பிடிக்கிறார்  நித்யா.

எப்போதும் சீராட்டப்படும் வளர்ப்பினாலோ என்னவோ குறும்புத்தனத்திற்கு எல்லையே இல்லாமல் இருக்கிறார் நாயகி. அந்த குறும்பின் விளைவினால் அவர் எடுக்கும் ஒரு முடிவு குடும்பத்தையே அதிர வைத்திட , சொன்ன பொய்யின் வேகம் அறிந்து நித்யாவும் கலங்கி நிற்கிறார்.

நாயகியின்  நிலை அறிந்தும் வராமல் இருப்பார் கதையின் நாயகன் ஜீவா ?  நித்யாவின் முடிவில் அத்தனை விருப்பம் இல்லை என்றாலுமே , ஏற்கனவே தான் ஒருதலையாய்  நேசிக்கும் தன்னவளை  வாடவைக்கும்  எண்ணமின்றி அவளின் திட்டத்திற்கு துணை நிற்கிறார் , கணவராக !

மனதளவில் காதலை வைத்துக்கொண்டு , நித்யாவின் நட்பிற்கும் முக்கியத்துவம் தந்து , அனைவரின் முன்னிலையில் நல்ல கணவன் என்றும் பெயர் எடுக்கும் ஜீவாவின்  செயல்களும் , குறும்புகளும் ரசிக்கத்தக்கவை . பல இடங்களில் குறும்புத்தனத்தால் சிரிக்க வைத்து , பல இடங்களில் வசீகரித்தினால் ரசிக்க வைக்கிறார் .

அவருக்கு இணையாக நாயகி நித்யாவும் , கதையின் ஆரம்பத்தில் இருந்த துள்ளலை கைவிடாது , அதே நேரத்தில் , தனது காதலை உணர்ந்த வேளையில் நாணத்தினாலும் , தனது உணர்வுகள் புரியப்படாத வேளையில் கோபத்தினாலும்  நம்மை வசீகரிக்கிறார் .

கொஞ்சமும் சந்தேகிக்க விடாமல் நட்பினை வழங்கும் ஜீவாவின் காதல் உணரப்பட்டது எப்போது ? அதற்கான  பதிலை நித்யா எவ்விதம் வெளிப்படுத்தினார் ? இவர்களின் திருமண நாடகம் பெற்றோரால் கண்டுப்பிடிக்கபட்டதா ? என்ற கேள்விகளுக்கு பதிலாய் கதை நகர்ந்து சுபத்தில் முடிகிறது .

நுண்ணுணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் இயல்பான தமிழில் நம்மை கதையோடு ஒன்றிட வைத்துள்ளார்  எழுத்தாளர் மனோரம்யா. அனைவரும் ரசித்து படிப்பதற்கு ஏதுவான நாவல்

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.