(Reading time: 5 - 9 minutes)

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

நாம் படித்தவை - 13 - மதுமிதா – லதா முகுந்தன்

madhumathi

ல பல கனவுகளுடன் திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கிறாள் மதுமிதா. கணவனின் சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி இருக்க, இப்போது அந்த வீட்டில் மாமியார் சொர்ணம், கணவன் ராஜா, அவனின் தம்பி பாலா மட்டுமே இருக்கிறார்கள்.

ராஜாவிற்கும், சொர்ணா அம்மாளிற்கும் பாலா மீது பாசம் மிக மிக அதிகம். இருவருக்குமே எப்போதுமே எதிலுமே அவன் தான் முதல். பாலா அவர்களின் இந்த பாசத்தை தனக்கு வேண்டிய விதத்தில் பயன்படுத்திக் கொள்ள கூடியவன்.

கணவன் வீட்டிற்கு வந்த முதல் நாள் முதலே அந்த வீட்டின் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக மாறி போகிறாள் மதுமிதா.

பாலா தனக்கு வேண்டியதை ராஜாவிடமும், சொர்ணம் அம்மாளிடமும் நயமாக பேசி எடுத்துக் கொள்வதை பார்த்து மனதினுள் வெதும்பினாலும் அதை சொல்ல முடியாமல் தவிக்கிறாள்.

வருடங்கள் ஓடி, மதுமிதாவிற்கு ஒரு மகன் பிறக்கிறான், பாலாவும் திருமணம் செய்துக் கொள்கிறான். அவன் மனைவி ரஞ்சனி பாலாவிற்கு ஏற்ற மனைவியாகவே இருக்கிறாள். உதட்டில் சிரிப்புடன் மதுவிடம் பேசுபவள், தன் கணவனிடம் நடந்தவற்றை ஒன்றிற்கு இரண்டாக மாற்றி சொல்கிறாள்.

இதனால் பாலாவிடம் திட்டுக்கள், அவனுக்கு ஜால்ரா போடும் மாமியாரிடம் பேச்சுக்கள், கணவனின் கோபங்கள் என்றே மதுமிதாவின் வாழ்க்கை தொடர்கிறது.

ரஞ்சனி நகர வாழ்க்கைக்கு ஆசைப்பட, எப்போதும் போல நயமாக பேசி, அவர்கள் இப்போது இருக்கும் கிராமத்து பழைய வீட்டை அண்ணன் தலையில் கட்டி அதற்கு பணமும் வாங்கிக் கொண்டு சென்னையில் வீடு கட்டி குடியேறுகிறான் பாலா. சின்ன மகன் மீது அதிக பாசம் வைத்துள்ள சொர்ணமும் அங்கேயே செல்கிறாள்.

வருடங்கள் ஓடி, வயோதிக நிலையை அடைந்த பிறகே தன் மூத்த மருமகளின் உயர்ந்த குணத்தை புரிந்துக் கொள்கிறாள் சொர்ணம். அவள் மலை என நம்பிய பாலா அவளை ஏமாற்றி விட அந்த அதிர்ச்சி தாங்காமல் உயிரை விடுகிறாள்.

பாலாவும் ரஞ்சனியும் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை தொடர்கிறார்கள். அண்ணன், அக்கா என ஒருவரையும் பக்கத்தில் சேர்க்காமல் தள்ளியே வைக்கிறான் பாலா. 

 

*************************** Spoiler ahead ***********************************

கதையின் முடிவை படிக்க விரும்பாதவர்கள், இந்த பகுதியை படிக்காதீர்கள்

ராஜா, மதுமதி கஷ்டப் பட்டாலும் தங்கள் மகனை பொறியியல் படிக்கக் வைக்கிறார்கள். அவனும் நன்கு படித்து நல்ல வேலையில் சேர்கிறான். ராஜாவும் மதுமதியும் ஓரளவிற்கு வாழ்வில் நிலையாகும் நேரத்தில் பாலாவின் வாழ்வில் சரிவு ஆரம்பமாகிறது. அவனின் மகள் ரோஜா பெற்றோரிடம் சொல்லாமலே ஓடி போய் திருமணம் செய்துக் கொள்கிறாள். மகன் லோகேஷ் தன்னுடன்  வேலை செய்யும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறான். வேறு வழி இல்லாமல் இந்த திருமணங்களை ஏற்றுக் கொள்கிறார்கள் பாலாவும், ரஞ்சனியும். லோகேஷ் பிஸ்னஸ் செய்ய போவதாக பணம் கேட்க, வீட்டின் பெயரில் கடன் வாங்கி தருகிறான் பாலா. பிஸ்னஸ் நஷ்டமாகி விட, அம்மா, அப்பாவை தனியே விட்டு விட்டு தன் மனைவியுடன் வெளிநாட்டிற்கு சென்று விடுகிறான் லோகேஷ். கடனில் வீடு மூழ்கி போக, சிறிய வாடகை வீட்டில் வாழ்கிறார்கள் ரஞ்சனியும், பாலாவும். முதல் முறையாக தங்களின் தவறுகளை உணர்கிறார்கள்,  தாங்கள் நடந்துக் கொண்ட விதத்தை நினைத்து வருந்துகிறார்கள். ராஜாவும், மதுமதியும் எப்போதும் போல இப்போதும் அவர்களிடம் அன்பாகவே இருக்கிறார்கள். தன் வீட்டின் பாதியை அவர்களுக்கு தருவதாக ராஜா சொல்ல, அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான் பாலா. இனிமேலாவது நேர்மையாக வாழ போவதாக சொல்லி தன் வாடகை வீட்டிலேயே வசிக்கிறான். ரஞ்சனியும் தன் தவறுகளுக்கு மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டு அவளிடம் அன்பாக இருக்கிறாள்.*************************** End of Spoiler *********************************** 

திருமண வாழ்வின் இனிமையை சொல்லும் எத்தனையோ கதைகளை படித்திருக்கிறோம். ஆனால் அந்த திருமண வாழ்க்கை கசப்பாகி போனால் எப்படி இருக்கும் என்பதை நச்சென்று சொல்லும் கதை இது.

மதுமிதாவின் சின்ன சின்ன ஆசைகள் கூட கேட்பாரற்று கரைந்து போகும் போது திருமணத்திற்கு பின் வரும் உறவுகள் எந்த அளவிற்கு ஒரு பெண்ணின் வாழ்க்கையை புரட்டி போடக் கூடியவை என்பதை தெரிந்துக் கொள்ள முடிகிறது.

பெண்ணிற்கு தன்னம்பிக்கையும், சொந்த காலில் நிற்கும் தைரியமும் கட்டாயம் வேண்டும் என்று நம்மை யோசிக்க வைக்கும் ஒரு கதை.

கதை என்ற உணர்வை கொடுக்காமல் நிஜ வாழ்வில் நடப்பதை நேரில் பார்ப்பதை போன்ற களமும், கதாபாத்திரங்களும் கதையின் பலம்.

 

நாம் படிக்கும் கதைகள், புத்தகங்களை பகிர்ந்துக் கொள்ள தான் இந்த புதிய பகுதி. நீங்களும் உங்களுக்கு பிடித்த கதைகள், புத்தகங்களை இங்கே பகிரலாம். அப்படி பகிர விருப்பம் இருந்தால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரிக்கும் உங்களின் கதை / புத்தகம் பற்றிய கட்டுரையை அனுப்பி வையுங்கள். நன்றி.

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:703}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.