(Reading time: 1 - 2 minutes)

 

தமிழர்  திருநாள் !

 

புத்தாண்டின் புதுமையிலே !

துள்ளி குதிக்கும் இளமையிலே 

தித்திக்கும் திருநாளாம் 

தைப் பொங்கல் பெருநாளாம் 

பக்தியுடன் பாவையரும் பால் பொங்கல் படைத்தாரே 

அதைக்கண்ட ஆதவனோ ஆனந்தத்தில் சிரித்தாரே 

வரும்காலம் வசந்தமாய் வேண்டுமென்று வரம்கேட்போம் 

வந்தவுடன் தந்தேனே வாழ்கவென்று அவன் சொன்னான் 

புத்தாடை அணிந்துக் கொண்டு 

புது மனதில் தெம்பு கொண்டு 

செங்கரும்பாய் இனிக்க வேண்டும் 

செந்தமிழை சுவைக்க வேண்டும் 

பட்டை உரித்த கரும்பைப் போல 

உள்ளம் என்றும் இருக்க வேண்டும் 

 

வாழ்க தமிழ் வளர்க தமிழகம் வெல்க தமிழ் மக்கள் !

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.