(Reading time: 1 - 2 minutes)

தமிழ் புத்தாண்டு கவிதை

 

சித்திரை திருநாளே வருக!
எங்கள் சிந்தையில் மகிழ்ச்சிகள் பெருக
நாங்கள் முத்திரை பதித்து வாழ்ந்திட வேண்டும்
அதற்க்கு முற்றிலும் முயற்ச்சிகள் எடுத்திட வேண்டும்
நங்கள் நித்தமும் உழைத்து உயர்ந்திட வேண்டும்
அந்த உயர்வால் உலகை ஈர்த்திட வேண்டும்

சித்திரை திருநாளே வருக!
எங்கள் சிந்தையில் மகிழ்ச்சிகள் பெருக
உழைத்தால் மனிதனுக்கு உயர்வு உண்டு
உழைப்பவனுக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் உண்டு
விதி என்று நினைப்பவனுக்கு துன்பங்கள் கொடுத்திடும் தொல்லை
மதியோடு வாழ்ந்தால் உனக்கு காத்திருக்கு இன்பத்தின் எல்லை

சித்திரை திருநாளே வருக!
எங்கள் சிந்தையில் மகிழ்ச்சிகள் பெருக
கதிரியே நீயும் கொஞ்சம் தணிக.:)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.