குழந்தையின் முத்தம் - சுமதி பழனிசாமி
அந்தி சாயும் நேரம்
உழைத்து களைத்து விட்டு
முகம் கழுவி வரும் என்னை
அணைத்து அம்மா என்றழைத்து
முத்தமிடும் அந்த நிமிடம் !
அந்த ஒரு நாளின் அயர்வும் சோர்வும்
மறைந்து உற்சாகம் பெருக்கெடுத்து ஒடும்.
இதற்காகவே இன்னும் உழைக்க தோன்றும் கண்ணே!