(Reading time: 1 minute)

கவிதை - தெரியவில்லையோ? - சுமதி

Heart

வாழ்க்கை பயணத்தில்

உன்னோடு நான் செல்ல 

வேண்டும் என்று

ஓராயிரம் கடவுளிடம்

ஒருமனதான வேண்டினேன்

ஒரு கடவுளுக்குகூட என்

ஒற்றை வேண்டுதல்

கேட்கவில்லையோ???

வாழ்ந்தாலும் உன்னோடு

வீழ்ந்தாலும் உன்னோடு

என உயிர்வாழும்

என் உயிர்வாடுவது

தெரியவில்லையோ????

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.