கவிதை - தெரியவில்லையோ? - சுமதி
வாழ்க்கை பயணத்தில்
உன்னோடு நான் செல்ல
வேண்டும் என்று
ஓராயிரம் கடவுளிடம்
ஒருமனதான வேண்டினேன்
ஒரு கடவுளுக்குகூட என்
ஒற்றை வேண்டுதல்
கேட்கவில்லையோ???
வாழ்ந்தாலும் உன்னோடு
வீழ்ந்தாலும் உன்னோடு
என உயிர்வாழும்
என் உயிர்வாடுவது
தெரியவில்லையோ????
{kunena_discuss:779}