மன்னிப்பு
குமுறும் எரிமலையாய் தகிக்கும் கோபம்
காட்டாற்று வெள்ளமாய் பெருக்கெடுக்கும் ஆத்திரம்
ஆர்பரிக்கும் அருவியாய் கண்களில் கண்ணீர்
நின் துரோகத்தின் விளைவாய் பிரளயத்தை சந்தித்த பூமியாய் நான்
எளிதாக கேட்கிறாய் மன்னித்துவிடு என்று
மனதால் நான் இறந்த பிறகு என் மன்னிப்பும் உனக்கு சாபமே !!!!