அவனும் நானும் - 10 - நான் மீண்டும் ஜனித்த தாய்மடி நீ - ப்ரியா
ஒவ்வொரு நொடியும்
மரணம் தழுவி மீண்டு...
மரிக்கும் உணர்வுகளுடன் கனவில்
ஒத்திகை தினமும் பார்த்து..
விதியை நொந்து
மதி வேலைநிறுத்தத்தில் வெந்து..
மலை என கணக்கும் பாரம்
தோள்களில் சுமக்க முடியா நேரம்..
கூட்டு புழுவாய் நான்
சுருண்டு புதைந்த காலம்...
மழையென வந்தாய்
என் மனம் திறக்க செய்தாய்..
இருளே என்றாலும் விரும்பி
உன் கையணைப்பில் புகுந்தேன்..
பத்துத் திங்கள் தேவையிருக்கவில்லை
பத்திரமாய் என்னை ஈன்றெடுத்தாய்..
பக்குவமாய் என்னை பார்த்துக்கொண்டே
என்னை என்னிடமே வளர விட்டாய்...
மனம் ஒரு குழந்தையாய்
உன் மடியிலேயே தவம் இருக்க..
மரத்து போன என் மன இடுக்ககுகளில் கூட
மகிழம் பூ வாசம் மகிழும் பூவாய் நான்..
அன்னையென என்னை தாங்கி
அன்பினாலே மீண்டும் உன் மடியில்
ஜனிக்கும் அற்புதம் செய்ததடா..
எனக்கு பட்டுச் சிறகை பொருத்தி
தேவதையாய் உலவ விட்ட
உன் பகட்டில்லா காதல்..!!!
{kunena_discuss:779}