கவிதை - நினைவின் பிம்பங்கள் - ப்ரியா
உனக்கு மட்டும் தான்
உதவுகிறது என் மனம்
மதியும் கூட.!!
வேர் உள்ளிழுக்கும் நீர் அனைத்தும்
வேருக்கு மட்டுமாய் உபயோகம்
என்றால் பரவாயில்லை..
கிளை வழி இலையின் நுனிவரை
மினுக்கும் நிலை தான்
உன் நினைவுகளுடன் என் மனநிலை
மனம் மட்டும் அல்லாமல்
உடலும் சோர்வுற்று போகிறது..
உன்னுடன் கழித்த பொழுதுகள்
இப்போது என் தனிமைக்கு
பொழுது போக்காய் உள்ளதில்
ஆச்சர்யம் இல்லை..
அதிர்ச்சியும் இல்லை..
ஆனாலும் அசர வைக்கும்
ஒரு விஷயம் உன்னை பற்றி
உண்டு என்றால்
உன்னை பிடித்த போதும்
உன்னை வெறுத்த போதும்
என்னை ஆக்கிரமிப்பு செய்ய
தவறவில்லை உன் நினைவின் பிம்பங்கள்..!!!
{kunena_discuss:779}