கவிதைத் தொடர் - அவனும் நானும் - 15 - பிரசவத்தின் பேரானந்தம் நீ...!! - ப்ரியா
உன்னவள் ஆன நாள் முதலாய்
மாதம் ஒவ்வொன்றும் மெதுவாய் கடந்து
ஆவல் அனைத்தும் மனதில் வளர்த்து
இல்லாத தெய்வத்துக்கும் பூஜை செய்து
நாட்கள் நகர்கையில் மகிழ்ச்சி கொண்டு..
முதல் மூன்று மாதங்கள்
கவனமாய் இருந்து
பூமி தாய்க்கும் வலிக்காமல்
மெதுவாய் நடந்து ..
அடுத்த மூன்று மாதங்கள்
இயற்கை மாற்றங்கள் அனைத்தும் தாங்கி
இமைக்கும் நொடி கூட
இயலாமை தனை ஏற்று ..
கடைசி மூன்று மாதங்கள்
நித்திரை நீங்கி
நிற்பதும் நகர்வதும் கூட
பாரம் ஆகி போக
பத்தாம் மாதம் நாள் தோறும்
ஏங்கி தவித்து ஏற்பாடுகள் செய்து
உடல் வலி சுமந்து
உயிர் பயம் கடந்து
ஈன்றெடுக்கும் நம் மழலையினை
நின் கையில் கொடுத்து
பெருமை பொங்கும் உன் முகத்தை
நான் இமைக்காமல் பார்க்கும்
நிறைவை போன்றதடா...
தினம் தினம் நீ எனக்காய்
பிரசவிக்கும் உன் காதல்..!!!
Next poem will be published as soon as the writer shares her next poem.
{kunena_discuss:779}