கவிதை - கனவோ! நினைவோ! - சரண்யா
கனவுகளின்றி அழிந்த நிஜங்கள்
தொடங்கும் முன்பே சந்தித்த முடிவுகள்
நம்பிக்கையில் நனைந்த விழிகள்
செய்வதறியாது துடிக்கும் இமைகள்
சோகமில்லை, மனதில் பாரமில்லை
எதையோ இழந்த உணர்வு மட்டும்!
திக்ப்ரம்மையில் சுழலும் நினைவுகள்
வெற்றுணர்வாய் போன உயிர்க்கூடு
மரத்துப்போன கற்சிலையோ - இவளது
மனமோ என்றும் வலியினில்
விழியினில் ஈரம் கொண்டு!