(Reading time: 1 minute)

கவிதை - கனவோ!  நினைவோ! - சரண்யா

tears

கனவுகளின்றி  அழிந்த நிஜங்கள் 

தொடங்கும் முன்பே சந்தித்த முடிவுகள் 

நம்பிக்கையில் நனைந்த விழிகள் 

செய்வதறியாது துடிக்கும் இமைகள் 

சோகமில்லை, மனதில் பாரமில்லை 

எதையோ இழந்த உணர்வு மட்டும்!

திக்ப்ரம்மையில் சுழலும் நினைவுகள் 

வெற்றுணர்வாய் போன உயிர்க்கூடு 

மரத்துப்போன கற்சிலையோ - இவளது 

மனமோ என்றும் வலியினில் 

விழியினில் ஈரம் கொண்டு!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.