கவிதை - கற்பனை - புரிதலில் பிரிதல் - சரண்யா
கண்ணிமைக்கும் நொடிகள் அனைத்திலும் உன் பிம்பம்
கண்ணோடு கண் நோக்கிய தருணங்கள்
கைகோர்த்து கதை பேசிய காலடித் தடங்கள்
ஆர்ப்பரிக்கும் அலையோசையில் சுடரெனத் தகிக்கும் சூரியன்
பொன்துகள்களாய் கண்ணைப் பறிக்கும் மணல்மேடை
சில்லென்று வீசும் இளம் தென்றலில் மெய்சிலிர்த்தேன்!
உன் கைகள் கோர்த்து தொடுவானம் தேடுகிறேன்
வான் நீலக் கடலின் அசைவினில் உன் தோள் சாய்ந்து!
மனதிற்கினிய கற்பனைகள் கானல் காட்சிகளாய்
மனம் பிரளவில்லை, மணம் பிறழ்ந்தது!!!
சொல்ல மனமில்லை, சொல்வதற்கும் வழியில்லை
காதலோ, அன்போ, நட்போ எதுவும் புரியவில்லை
புரிந்தால் இங்கு என்றும் இனிய அவஸ்தையில்லை!
இனி புரிவதற்கும், புரிதலில் ஏதும் மீதமில்லை!!!