கவிதை - உன்னை பார்த்த வேளை - சரண்யா
மனதினில் எழுந்திடும் ஆவல்
கண்களில் உறைந்திடும் புன்னகை
இதழ் வரை வந்த வார்த்தைகள்
கானல் நீராய் தோன்றிடும் காட்சிகள்
கனவுகளின்றி தவிக்கும் விழிகள்
புயலென ஆர்ப்பரிக்கும் இதயம்
அனைத்தும் அடங்கியது என் விழிநீரில்
உன்னை என் கண்கள் கண்ட நொடியினில்!!!