(Reading time: 1 - 2 minutes)

கவிதை - பச்சிளம் மனம் - சரண்யா

kid

வண்ணச் சிறகுகளை விரிக்கும் பல எண்ணங்கள் 

முடிவே இல்லாது முடிந்து விடுமா என மனதின் கோலங்கள் 

பனி விழும் நாளில் குளிர் நீரினை கொட்டிய காலங்கள் 

கவலைகள் ஏதுமில்லை இங்கு கண்ணீருக்கு இடமில்லை 

செய்வன அனைத்தும் புதுமைகள், பவனி வரும் பதுமைகள்!

வெற்றி நோக்கிய பயணமில்லை மனதை உணரும் பாதை 

கொட்டிக் கிடக்கும் விடியலின் குவியல், இனிய குயிலின் 

ஓசை கேட்டு மனதின் கதவுகள் திறக்கட்டும் - இங்கே 

பால் மனம் மாறாத பச்சிளம் குழந்தைகளின் நகையொலியில் 

செவ்விதழ் கொண்டு உறுத்தாத அன்பெனும் கவி இசைக்கும் 

என் கண்மணி குழந்தாய் - உன்னைப் பற்றி  முத்தமிட 

இவ்வுலகம் மறக்கிறேன் என் இதயம் தொலைக்கிறேன்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.