கவிதை - என்னுள் தொலைந்தேன் - சரண்யா
உன் குரலின் மாற்றத்தில் என் உயிர் துடிக்கும்
கேலி நகையில் சுற்றம் மறக்கும் மனது
வாழ்நாள் முழுதும் உன் துணை நிற்பேன்
நிகழ் நனவில் யாரோவென ஒதுங்குகிறேன்
அந்தம் அறியேன் உந்தன் நெஞ்சம் அறியேன்
எனக்குள் என்னையே தொலைத்தேன் உனை எண்ணியே!
மனம் வருடும் நினைவுகள் மட்டுமே நம்மில் என்றும்
தூரமிருந்தும் நேசிக்கிறேன், விலகி இருந்தும் யாசிக்கிறேன்!!!