(Reading time: 1 minute)

கவிதை - என்னுள் தொலைந்தேன் - சரண்யா

love

உன் குரலின் மாற்றத்தில்  என் உயிர் துடிக்கும் 

கேலி நகையில் சுற்றம் மறக்கும் மனது 

வாழ்நாள் முழுதும் உன் துணை நிற்பேன் 

நிகழ் நனவில் யாரோவென ஒதுங்குகிறேன் 

அந்தம் அறியேன் உந்தன் நெஞ்சம் அறியேன் 

எனக்குள் என்னையே தொலைத்தேன் உனை எண்ணியே! 

மனம் வருடும் நினைவுகள் மட்டுமே நம்மில் என்றும் 

தூரமிருந்தும் நேசிக்கிறேன், விலகி இருந்தும் யாசிக்கிறேன்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.