வீழாமல் வீழ்த்திடு - சரண்யா
வீரமாய் எழுந்திடு பெண்ணே
விம்மிய விழிகளில் திரண்ட
கண்ணீர்த் துளிகளை வைரமாக்கி
நெஞ்சுரம் ஏற்றிக் கொள்
கலங்காதே, கலங்க வைத்த
உள்ளம் கலங்க வேண்டும்
உன்னை எட்டி உதைத்தவர்களை
நீயும் உதறி விடு !
வீழ்த்த நினைப்பவர்கள் முன்
வீழாமல் வீழ்த்திடு !
உன் விழிகள் கண்டு அஞ்ச
வேண்டும் - வீண் கதைகள் பேசி
விழவைத்தவர்கள் வீழ வேண்டும் !
மீண்டும் உயிர்த்தெழு
பெண்ணே உள்ளம் கலங்காதே
கண்ணில் தோன்றிடும் வெப்பமே
சுட்டெரித்து விடும் - என்றும்
வாழ்வில் வசந்தமே இனி
மழைசாரல் வந்து வாழ்த்தும்
உன்னை, வான் பூக்களாய் !!!
{kunena_discuss:779}