விடியலைத் தேடி!!! - சரண்யா
காரிருளின் நடுவில்
கலங்கும் விழிகளுடன்
கற்பனை உலகத்தில்
வாழ்ந்த கனிகை
உறவுகளும் இல்லை
தோழனும் இல்லை
தோழியும் இல்லை
வெற்றுக் கனவுகளின்
கண்ணாமூச்சி இளவரசி !!!
அவளின் துன்பம் சொல்ல யாருமிலர்
அவளது துயர் அகற்ற எவருமிலர்
அவளது துன்பமோ கோபமானது - அன்னையிடம்
அன்னையின் கோபமோ துயரத்தின் சாபம்
இவளது வாழ்வோ அனுதினமும் கண்ணீரில்
என்று தீரும் இவளின் துயரம்?
என்று விடியலைத் தேடும் இவளது பயணம்?
என்றும் காத்திருப்பாள் மௌனமாக!!!