(Reading time: 1 - 2 minutes)

உன்னில் வைக்கிறேன் என் இதயம் - சரண்யா

unnil vaikkiren en ithayam

கனவுகள் காணும் வரை இல்லாத சந்தோஷம்

கனவுகள் கலைந்த பின் மனதில் இழையோடும் வருத்தம்

கனவுகளும் பொய்! இங்கு என் காதலும் பொய்! எல்லாம் பிரமை!

காற்றில் எழும் கீதம் என் மனதில் உள்ள

வலியின் சோக கீதம் இசைக்கும்

கண்ணில் பெருகும் கண்ணீர் கூட வரையும் உன் பிம்பம்

கற்பனையில் மட்டும் முடிந்து விடுமா நம் வாழ்க்கையும்?

உன்னில் வைக்கிறேன் என் இதயத்தை, வலி மட்டும் தந்து விடாதே

என் உணர்வுகளை கரிய விழியிரண்டில் பூட்டிவிட்டு

என்னை உயிருடன் உணர்விழக்க செய்யாதே!

உறவென்று சொல்லக் கூட யாருமில்லை

உயிர் பிரியும் வரை வேண்டும் உன் சொந்தம் எனக்கு!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.