கவிதை - ஹோலி - ஜான்சி
ஹோலிப் பண்டிகையின் பின்மதியப் பொழுதில் மும்பையின் ஒரு பரபரப்பான பகுதியின் காட்சி..
நிறங்களப்பிய வீட்டுச் சுவர்கள்,
அழுக்காய் மாறிப்போன வண்ணக் கலவையான வழிப்பாதைகள்,
கடைகள் மூடி லீவைக் கொண்டாடும் வெறிச் சாலை,
தாய்மார்கள் குளிக்க வைத்து விட்டிருந்தும் பல நிறமாய் காட்சியளிக்கும் புன்னகைப் பூத்த சிறார்கள்.
போதையில் தடுமாறிக் கொண்டு நிற்கும் வண்ணத்தில் மூழ்கி எழுந்த மனிதர்கள்,
இன்று எனக்கு மட்டும் அடைப்பு இல்லை என்றுரைக்கும் மதுக்கடைகள்.
இன்றே வாழ்வை வாழ்ந்து முடித்திட வேண்டுமென்று மதுக்கடைகள் முன் வரிசையில் நிற்கும் இளைஞர்கள் கூட்டம்.
{kunena_discuss:779}