06. எழுந்து வா - ஜான்சி
எதிர்கால அச்சங்கள்
நிகழ்கால மகிழ்வுகளைத் திருடும்.
நிலையற்ற வாழ்வில்
நீ நிகழ்ந்திடுமோவென மனதிற்க்குள் தவிக்கும்
கவலைகளும் கூட ஒருபோதும் நிகழாமல் இருந்திடவும் கூடும்.
எனவே, ஊகங்கள், உள்ளத்து சந்தேகங்கள் அகற்றி,
இன்றைய நாளில் உள்ளத்தை இருத்தி
உயர்ந்து நீ வாழ
எழுந்து வா, எழுந்து வா.!
{kunena_discuss:1090}