27. காதல் என்பது - ஜான்சி
செவிகள் அதிர உரக்கப் பேசினும்,
கேட்க ஆட்களில்லா வெட்டவெளியில்
அவளும் , நானும் விரல்கள் கோர்த்து
இயற்கை ரசித்து நடமாடும்
சுகானுபவ தருணங்களில்...
எங்களுக்கேயான
பிரத்யேக விஷயங்களை
மட்டும் ஏனோ...
என் முகம் திருப்பி
தன் உயரத்திற்கேற்ப நான் தாழ
எந்தன் கையை கீழே இழுத்து
ரகசியமாய் - எந்தன்
காதுக்குள் கிசுகிசுப்பாள்
என்னவள்....
ஏனோ....
இதுதான் காதலா?
{kunena_discuss:1090}