(Reading time: 1 minute)

27. காதல் என்பது - ஜான்சி

Love is

செவிகள் அதிர உரக்கப் பேசினும்,
கேட்க ஆட்களில்லா வெட்டவெளியில்

அவளும் , நானும் விரல்கள் கோர்த்து
இயற்கை ரசித்து நடமாடும் 
சுகானுபவ தருணங்களில்...

எங்களுக்கேயான
பிரத்யேக விஷயங்களை
மட்டும் ஏனோ...

என் முகம் திருப்பி
தன் உயரத்திற்கேற்ப நான் தாழ
எந்தன் கையை கீழே இழுத்து

ரகசியமாய் - எந்தன்
காதுக்குள் கிசுகிசுப்பாள்
என்னவள்....

ஏனோ....

இதுதான் காதலா?

Poem 26

{kunena_discuss:1090}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.