06. எழுந்து வா - ஜான்சி
வில்லம்புகள் தாக்காத
வீரன் இருக்கலாம்.
சொல்லம்பு தாக்காதோர்- இங்கே
யாரும் உளரோ?
இஷடம் போல் வளையும்
நாக்கென்னும் கொடிய விலங்கு
தனக்கஞ்சுவோர் வாழ்வை
ரசித்து ருசித்து புசிக்கும்.
உன் சொற்கள் எனைத் தாக்காதென- நீ
நிமிர்ந்திடும் கணமே,
ஓ..நீயா... நான் நாடியது நீயல்ல,
வேறொருவனென்று விலகும்.
வீரனே ஆனாலும் எதிர் வரும் அம்பிற்கு - தன்
நெஞ்சை நிமிர்த்துவானோ?
இப்படியிருக்க ஏன் நீ மட்டும்
சொல்லம்பிற்கு வலிந்து தனை பலியாக்குகின்றாய்?
தாக்கும் சொல்லம்புகள் மட்டில்
அலட்சியம் கொண்டிடு,
கருத்தாய் நீயும்
கடமையில் நிலைத்திடு,
லட்சியத்தில் வெற்றி பெற்றிடவே தோழா....
துணிவாய் நீயும்
எழுந்து வா, எழுந்து வா.
{kunena_discuss:1090}