(Reading time: 1 - 2 minutes)

06. எழுந்து வா - ஜான்சி

Don't give up 

வில்லம்புகள் தாக்காத

வீரன் இருக்கலாம்.

 

சொல்லம்பு தாக்காதோர்- இங்கே

யாரும் உளரோ?

 

இஷடம் போல் வளையும் 

நாக்கென்னும் கொடிய விலங்கு

 

தனக்கஞ்சுவோர் வாழ்வை

ரசித்து ருசித்து புசிக்கும்.

 

உன் சொற்கள் எனைத் தாக்காதென- நீ

நிமிர்ந்திடும் கணமே,

 

ஓ..நீயா... நான் நாடியது நீயல்ல,

வேறொருவனென்று விலகும்.

 

வீரனே ஆனாலும் எதிர் வரும் அம்பிற்கு - தன் 

நெஞ்சை நிமிர்த்துவானோ?

 

இப்படியிருக்க  ஏன் நீ மட்டும்

சொல்லம்பிற்கு வலிந்து தனை பலியாக்குகின்றாய்?

 

தாக்கும் சொல்லம்புகள் மட்டில்

அலட்சியம் கொண்டிடு,

 

கருத்தாய் நீயும்

கடமையில் நிலைத்திடு,

 

லட்சியத்தில் வெற்றி பெற்றிடவே தோழா....

 

துணிவாய் நீயும்

எழுந்து வா, எழுந்து வா.

Poem 05

{kunena_discuss:1090}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.