கண்டுகொண்டேன் - மனோ ரமேஷ்
கன்னம் வருடும் மாலை காற்று
கண் முன் விரிந்த வானம்
உறவு தேடி கூடு சேரும் பறவைகள்
அவற்றோடு போட்டி போட்டு
இரைச்சலோடு பாயும் எந்திர பறவைகள்
இருட்டும் முன்னே
அழையா விருந்தாளியாய் நிலா
காதுக்குள் இசைமழை
மனதிற்குள் கால் நனைத்த அலை ஓசை
ஹாஸ்டல் மொட்டை மாடியில்
புதைத்து இருந்த சொர்க்கத்தை
ஏனோ இந்த மாலையில் தான்
கண்டுகொண்டேன்