(Reading time: 1 - 2 minutes)

கனாவுடன் நான் - ஷக்தி

Kanaa

 

பறப்பதற்கும் பார்ப்பதற்கும்  மட்டுமல்ல ஆகாயம்

என்று சொல்லி தருவாயா நீ ..

 

காத்திருக்கிறேன் நான்...

 

வாசத்திற்கும் சுவாசத்திருக்கும் மட்டுமல்ல தென்றல்

என்று உணர வைப்பாயா நீ ..

 

உயிர்த்திருக்கிறேன் நான்..

 

அலைகளுக்கும் மணல் வீட்டிற்கும் மட்டுமல்ல கடலோரம்

என்று அறைந்து சொல்வாயா நீ ..

 

அறியாமையுடன் நான் ...

 

இடம் விட்டு இடம் பெயர்தல் மட்டுமல்ல பயணம்

என்று மறுபரிசீலனை செய்வாயா நீ..

 

தனிமையில் தொடர்கிறேன் நான்...

 

பொருளும் பணமும் மட்டுமல்ல செல்வம்

என்று புரிய வைப்பாயா நீ..

 

செல்வம் தேடி தொலைகிறேன் நான் ...

 

வார்த்தைகளும் சப்தங்களும் மட்டுமல்ல மொழி

என்று மௌனம் போதிப்பாயா நீ..

 

நின்விழி மயக்கத்தில் நான்...

 

பயணிக்கும் காலமும் கடமையும் மட்டுமல்ல வாழ்க்கை

என்று வாழ கற்றுத்தருவாயா நீ ..

 

வாழ்ந்துகாட்ட கனாவுடன் நான்..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.