கவிதை - இயற்கையுடன் நான் - புவனேஸ்வரி கலைசெல்வி
அருவியின் குணமறிகிறேன் தோழி,
வற்றாத அன்பினை அன்னையவர் புகட்டிட!
தாவரங்களின் குளிர்ச்சியறிகிறேன் தோழி,
பசுமையான நினைவுகளை தந்தையவர் விட்டுச்செல்ல!
சூரியனின் கதகதப்பை உணர்கிறேன் தோழி,
நடுங்கும் என் அச்சங்களுக்கு உற்றவன் நம்பிக்கைத்தர!
வானவிலின் அழகறிகிறேன் தோழி,
தோழிமார்கள் வாழ்வெனும் வெள்ளை காகிதத்தில் ஓவியமாகிட!
புயலின் வேகமறிகிறேன் தோழி,
துரோகம் இழைத்தவர்கள் மனதை சுழல வைத்திட!
தென்றலின் கருணையறிகிறேன் தோழி,
பந்தமில்லா பலரும் பாசத்தால் வருடிட!
பௌர்ணமியின் பிரகாசமறிகிறேன் தோழி,
பிள்ளைகள் கள்ளமில்லாமல் சிரித்திட!
இயற்கையை யாசித்து மாந்தர்கள் சுற்றிட
இயற்கை எனையே காந்தமென சுற்றுவதை அறிகிறேனடீ தோழி!
{kunena_discuss:779}