(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நானும் தடுமாறுகின்றேன் - புவனேஸ்வரி கலைசெல்வி

love

திரும்பி பார்க்கும் எண்ணமின்றி

பயணம் ஒன்று மேற்கொள்ள,

திருப்புமுனை ஒன்று

நயணத்தில் நெகிழ்கிறதே!

 

சிரிக்காதே என்று எச்சரித்த

என்னிதழ்கள்,

அவன் சிரிக்க வைத்து படிக்கும்

நாளிதழ்கள் ஆகினவோ?

 

நடக்க தெரியாதவள் நானே

என எண்ணம் கொண்டவனோ?

கடப்பது இரண்டடி என்றாலும்

கரம் பிடிக்கின்றான் ஏன்?

 

கண்ணீரில் பக்கம் பக்கமாக

எழுதி தொலைத்தவளை

இன்பத்தில் எழுதிப் பார் என

சவால் விடுகிறான்!

 

இன்று புரிகிறது, கவிஞர்கள் கசக்கி போட்ட

காகிதங்கள் எத்தனை தடுமாற்றங்களை சந்தித்தவை என்று!

நானும் தடுமாறுகின்றேன்,

இதோ காகிதங்களின் நடுவில் காதலுடன்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.