(Reading time: 1 - 2 minutes)

கவிதை - என் தோழி - புவனேஸ்வரி கலைசெல்வி

Rain

விழுவதும் அழகென உரைத்தாள்

நடுங்குதல் நளினம் தான் என்றாள்

சரண் அடைவதெல்லாம் சரித்திரம் என காட்டினாள்

அவள் வலியை  பிறர் கண்களுக்கு விருந்தாக்கினாள் !

 

தலை குனிந்து முத்தமிட்டு தலைகணம்  போக்கினாள்

அங்கமெங்கும் தீண்டி அகம் சிலிர்க்க வைத்தாள்

வறட்சியினை விரட்டி வலம்  தந்தாள்

ஒவ்வொரு மனதிற்கும் பலம் தந்தாள் !

 

அவள் என்னை  தொடும்போதெல்லாம்

நான் எவனையோ  மன்னிக்கிறேன்

என் பாவம் கழுவும் தீர்த்த நீராகினாள் 

மழை எனும் தோழி !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.