கவிதை - என் தோழி - புவனேஸ்வரி கலைசெல்வி
விழுவதும் அழகென உரைத்தாள்
நடுங்குதல் நளினம் தான் என்றாள்
சரண் அடைவதெல்லாம் சரித்திரம் என காட்டினாள்
அவள் வலியை பிறர் கண்களுக்கு விருந்தாக்கினாள் !
தலை குனிந்து முத்தமிட்டு தலைகணம் போக்கினாள்
அங்கமெங்கும் தீண்டி அகம் சிலிர்க்க வைத்தாள்
வறட்சியினை விரட்டி வலம் தந்தாள்
ஒவ்வொரு மனதிற்கும் பலம் தந்தாள் !
அவள் என்னை தொடும்போதெல்லாம்
நான் எவனையோ மன்னிக்கிறேன்
என் பாவம் கழுவும் தீர்த்த நீராகினாள்
மழை எனும் தோழி !
{kunena_discuss:779}