01. ராதா கிருஷ்ணன் காதல் - அணைக்கிறான் மாதவன் - புவனேஸ்வரி
அவளை மலர்கள் பூத்திருந்த நந்தவனத்தில் அமரவைத்தோம்
மலர்வண்டுகள் என்னவனுக்குச் சொந்தமான என் பெண்மையை தீண்டிச் செல்கிறதே என்று வருந்தினாள்!
அவளை நதியின் நடுவில் பாய்மரக்கப்பலில் மிதக்கவிட்டோம்
என்னவன் தீண்டாத என்னை நீர் திவலைகள் தீண்டுவதை விரும்பவில்லை என்று புகார் கூறினாள் !
அவளை ரத்தினங்களின் மத்தியில் விளையாடவிட்டோம்
இவை என்னவனின் புன்னகைக்கு ஈடாகாது என்றாள் !
அவளை பறவைகளுடன் பேசவிட்டு மறைந்து நின்றோம்
என்னவன் பெயர் சொல்லா உன்னை எப்படி ரசிப்பது என்று வினவினாள்!
அவளை அவனிடமே சமர்ப்பித்தோம்
கண்டேன் நான் கண்டேன்
பூக்காத மலருக்குள் ஒளிந்திருந்த வாசம் கண்டேன் !
மீட்டாத வீணையின் நாதம் வரும் திசை கண்டேன் !
காய்க்காத கனியிலும் கனிந்திருந்த சுவை கண்டேன் !
கொதிக்கும் சூரியனில் குளிர்காயக்கண்டேன் !
வெண்ணிலவின் வெட்கமுகம் கண்டேன் !
பறவைகளின் பாஷைஜாலத்தைக் கண்டேன் !
என் வேணுகான மாதவனின் கதகதப்பில்
இதுவரை காணாத உலகை கண்டேன் என்றாள் !!
எனக்குஇருக்கும்பேராசைகளில்ஒன்று , ராதாகிருஷ்ணனின்காதலைபற்றிஎழுதுவது! ஏனோஅதில்நான்வெற்றிகண்டதில்லை இதுவரை. எவ்வளவுசிந்தித்துஎழுதினாலும்திருப்திஎன்பதுஎனக்குஎட்டாக்கனிதான் .. இருந்தும்அடிக்கடிஎன்எழுதுகோள் எகிறிதுடிக்கிறது " மீண்டும்முயற்சிசெய் " என்று ! இதோஅந்தமுயற்சியெனும் அருவியில்ஒருதுளிகவிதைஉங்கள்பார்வைக்கு ..நன்றி
{kunena_discuss:779}