05. ராதா கிருஷ்ணன் காதல் - கண்ணன் ராதை அடைக்கலம் - புவனேஸ்வரி
அடைந்தாள் ராதை மாதவனின் மடியில் தஞ்சம்
பொங்கிப் பெருகிய காதலை தாங்கியது இருவரின் நெஞ்சம் !
கண்ணீர் பொங்கிட கண்டாள் கண்ணனின் வதனம்
மாயவனின் கன்னங்களிலோ தீப்பட்டதுபோல் காயம் !
அதிர்ந்து எழுந்தாள் கண்ணனின் சரிபாதி
விழி திறந்த கண்ணனிடமோ பதில் இல்லா அமைதி !
விரல் நடுங்க தொட்டாள் யதுனந்தனின் கன்னம்
சட்டென மாறியது காயத்தின் வண்ணம் !
கள்ளம் புரிந்தவன் காதலோடு சிரித்தான்
மனதில் சிலிர்த்தவளோ பொய்யாய் முறைத்தாள் !
பற்றினான் ஓட முயன்றவளின் கரம்
வேண்டாம் உன் லீலை இன்னொரு தரம் !
லீலை யான் புரியவில்லையே என்றான் மன்னவன்
எனில் காணும் காட்சி பொய்யோ என்றாள் அவனவள் !
விளக்கம் சொல்கிறேன் அருகில் வா ராதை
வேண்டாம் நான் அறிவேன் கண்ணன் அருகாமை தரும் போதை !
புன்னகை புரிந்தவன் விளக்கமும் தந்தான்
விளக்கம் உணர்ந்தவள் அவனை தழுவிடவே வந்தாள் !
கண்ணனின் இன்னுயிர் ராதை
அவள் கண்ணீரோ அவனுக்கு சித்ரவதை !
காதலில் பூத்த அவள் ஒரு புஸ்பம்
அவள் சிந்திய கண்ணீரில் ஆனது அவன் உள்ளம் பஸ்பம் !
அகத்தின் அழகை காட்டும் முகம்
காட்டியதே கண்ணனின் தீப்பட்ட நெஞ்சம் !
அவள் கண்ணீராலே அவன் கொண்டான் காயம்
இதை மாயம் என்பதில் உண்டோ நியாயம் ?
கேட்டான் கண்ணன் கேள்வியுடன் அவள் நெஞ்சத்தை
தந்தாள் ராதை தழுவலுடன் தன் உள்ளத்தை !
செந்நிற பூக்களும் முகம் சிவக்கும் இரவு
தொடங்கியதே கண்ணன் ராதையின் காதல் நல்லுறவு!
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்
{kunena_discuss:779}