மன்மத - சித்திரை உதயம் - புவனேஸ்வரி
பார்க்கும் காட்சிகள் பசுமையாகட்டும்
ஸ்வாசிக்கும் காற்று தூய்மையாகட்டும் !
கேட்கும் இசையெல்லாம் இதமாய்மாறட்டும்
சேரும் கரமெல்லாம் கரகோஷம் எழுப்பட்டும் !
தனித்துவம் பொருந்திய குணம் பொங்கட்டும்
சுயநலம் இல்லாத தன்மை பரவட்டும் !
பணியும் பாதங்கள் பெற்றோராய்இருக்கட்டும்
உதிர்க்கும் வார்த்தைகள் இனிமையாகட்டும் !
நடக்கும் பாதைகள் நேர்மையாகட்டும்
உரைக்கும் சத்தியங்கள் உண்மையாகட்டும் !
சேரும் உறவுகள் இணைந்தே இருக்கட்டும்
கைகூடும் மணவாழ்வு மணம்வீசட்டும் !
மறைவது எல்லாம் இன்னலாய் இருக்கட்டும்
வளர்வது எல்லாம் வெற்றியாய் இருக்கட்டும் !
விதைப்பது எல்லாம் முயற்சியாய் இருக்கட்டும்
முளைப்பது எல்லாம் வெற்றியாய் இருக்கட்டும் !
தொடங்குவது அனைத்தும் நட்பில் தொடங்கட்டும்
முடிவது அனைத்தும் மனநிறைவில் முடியட்டும் !
சேர்வது அனைத்தும் நன்மையாய் இருக்கட்டும்
பிரிவது அனைத்தும் தீமையாய் இருக்கட்டும் !
புனைவது அனைத்தும் புனிதமாய் இருக்கட்டும்
களைவது அனைத்து கண்ணில்படாமல் மறையட்டும் !
தேடுவது அனைத்தும் பொதுநலமாய் இருக்கட்டும்
அடைவது அனைத்தும் அன்பாய் இருக்கட்டும் !
பெண்மைக்கு காவல் ஆண்மையாகட்டும்
அதுவே ஆண்மைக்கு மகுடமாகட்டும் !
கும்பிடும் தெய்வம் உழைப்பாக இருக்கட்டும்
உழைப்பவருக்கெல்லாம் இறைவனின் அருள்கிட்டட்டும்!
எல்லா நாளும் நல்ல நாள் என்றாலும் கூட சில பண்டிகை தினங்கள் கொடுக்கும் உற்சாகத்திற்கு அளவே இல்லை .. அந்த உற்சாகத்தோடு சில்சீயில் அன்பால் இணைந்திருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் என் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள் .. இனி வரும் நாட்களில் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் புதிய முயற்சிகளுக்கும் என் வாழ்த்துக்கள் .. எட்டுத்திக்கும் அன்பும் நேசமும் பெருகட்டும் .. நன்றி :)
{kunena_discuss:779}