அகரத்தில் என் காதல் - புவனேஸ்வரி
அன்பே
அனுதினம்
அணுகி
அன்பினை
அறிவிக்க
ஆசைதான் !
ஆயினும்
ஆசைகள்
ஆயிரம்
அமைதியில்
அனுதினம்
அவதரிக்கும்!
இனியோர்
இன்னுயிர்
இருந்தால்
இனியவனோடு
இணையட்டுமே
இதுவே
இவளது
இச்சை
இன்றுமுதல்!
இயல்பாய்
இருப்பவன்
இதயமாகிய
இலக்கியம்
இன்றே
உரைத்திடவா ?
உண்மை
உன்னிடம்
உரைத்தால்
உதடுகளாலே
உயிர்பிப்பாயா ?
உன்னை
உயிராய்
உணர்ந்தேன்
உலகில்
உரக்க
உரைத்திடவா ?
என்னவன்
எதிரில்
என்னெழில்
ஏங்கிடுதே!
எங்கிருந்தோ
எனக்குள்
ஏனோ
ஏகாந்தம்
எழுகிறதே !
ஐயோ
ஒன்றோடு
ஒன்றாய்
ஒன்றிடதானே
ஔடதம்தேவை (காதல் ஔடதம் தேவை)
ஓ உயிரே !
ஃ தே போதுமெனக்கு!
{kunena_discuss:779}