08. ராதா கிருஷ்ணன் காதல் - நிலவே நீ சாட்சி - புவனேஸ்வரி
நிலவு மயங்கிடும் இரவு !
தொடர்ந்தது கண்ணன் ராதையின் உறவு !
அவன் தோள் சாய்ந்த மங்கை வென்றிருந்தாள் புவியை !
அவள் இனிமையில் கனிந்த அவன் மனம் அரங்கேற்றியது கவியை !
தேவர்களில் யாருக்கோ பொறாமையில் வந்தது வேதனை !
இதோ இயற்றத் தொடங்கினர் ராதைக்கு புதிய சோதனை !
கண்மூடி காதலில் லயித்த மன்னன் சொல்லி விட்டிருந்தான் மீராவின் பெயரை !
அதுவரை சிலிர்த்திருந்த ராதை உடனே தழுவினாள் துயரை !
கேட்டாள் ஆயிரம் கேள்விகளை !
இயற்றினாள் மனதுக்குள் வேள்விகளை !
என்னை முத்தமிட்ட உன் இதழ் கூறுவது இன்னொருத்தி நாமம் ?
இதை காணவா வந்தேன், இதோ சிரிக்கிறதே அர்த்த ஜாமம் ?
கோபியருக்கும் நீ கள்வனாம் !
கன்னியருக்கு நீ காதலனாம்!
கேட்டேன் பல்லாயிரம் செய்தியை !
இருந்தும் அமைதி காத்தேன் உன் பாதியாய் !
உடைத்துவிட்டாயே கண்ணா உன்னை நம்பி வந்தவளின் உள்ளம் அதை !
வெம்பி வீழ்கிறதே எனதுயிர் , நீயே பறித்துவிடு உனக்காய் சேர்த்த உயிர் அதை !
புன்னகைத்தான் கண்ணன் !
ராதையின் மன்னன் !
பின்னாலிருந்து அணைத்து வானில் கை காட்டினான் !
துடிதுடித்த அவள் உள்ளத்தை ஸ்பரிசத்தால் கைதாக்கினான் !
கேட்கிறேன் ராதை, வானில் பார், தேர்ந்தெடு ஒரு நட்சித்தரத்தை பெயரிடு கண்ணன் என்றே !
சொல்கிறேன் விளக்கம் உன் மனதில் இருக்கும் துயரை வென்றே !
அண்ணார்ந்து பார்த்தாள் நிலவருகில் மின்னினான் நட்சத்திரம் !
நிலவின் அருகில் மினுமினுத்த விண்மீன் அவள் கண்களில் பத்திரம் !
கூறுகிறேன் கேள் கண்ணா, அதோ அங்கு கண் சிமிட்டும் நட்சித்திரமே நீ !
என்ன விடை தரப்போகிறாய் எரிகிறதே பேதை நெஞ்சில் பொறாமைத் தீ !
விழிமூடி திற ராதை, மீண்டும் என்னை அடையாளம் காட்டுவாய் !
கண்ணன் மீது தவறு கண்டுவிட்டால் தண்டனையாய் பிரிவைத் தந்து என்னை வாட்டுவாய் !
விழி மூடினாள் மாதவனின் சகி !
விழி திறந்தாள் வானிலே சதி !
மின்னியது நட்சத்திரம் அத்தனையும் ஒன்றாய் !
குழம்பிவிட்டாள் பேதை அவள் அவனை காணாமல் நன்றாய் !
காண்கிறேன் வானில் அனைத்து நட்சத்திரமும் ஓர் உருவாய் !
எதை உரைப்பேன் நீ என்று, காண்பவை எல்லாம் தெரிகிறது நீயாய் !
உணர்ந்துவிடு சகி, கண்ணனும் ராதைபோலதான் !
காண்பவை அனைத்தும் ராதையாய் இருந்தால் காதல் கொள்ளாதோ என் உள்ளம் தான் !
என் கண்களுக்கு தெரிகின்ற உயிர் அனைத்தும் ராதை !
எனை அணைக்க துடிக்கும் இதயத்திற்குள் துடிப்பவளும் ராதை !
வெவ்வேறு இதழ்களால் அழைத்தாலும் எனக்குள் கேட்கும் குரல் ராதை !
பலராய் உன் கண்களில் தெரிவோர், என் கண்களுக்கு ராதை !
அதனாலேயே ஏற்கிறேன் அவர்களின் உணர்வை !
காதல் கொள்ளும் உள்ளம் அனைத்திலும் இருப்பாள் என் ராதை எனும் பாவை!
உணர்ந்தேன் உன் உள்ளதை இன்றே மாதவா !
மாதவம் வேண்டாம் உன்னை சேர, அன்பே போதும் அல்லவா ?
தலை குனிந்தான் பொறாமை கொண்ட வானுலக தேவன் !
கேட்டான் மன்னிப்பை, மன்னித்தான் கண்ணன் !
மீண்டும் முகிலின்பின் மறைந்து கொண்டாள் வெண்மதி !
கண்ணனின் மார்பில் சாய்ந்த ராதை அடைந்தாள் நிம்மதி !
அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்
{kunena_discuss:779}