உன் மகளாய் நானோ ? - புவனேஸ்வரி
மழை நின்றபின் துளி தாங்கும் இலையை போல
நீ சென்றதும் உன் நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாய் தாங்குகிறேன்
உன்னுடன் சேர்ந்திட தான் எத்தனை தடைகள்
உன்னிடம் முதல் முறை பேசிடத்தான் எத்தனை தயக்கம்
உன் அறிமுகம் பெற்றப்பின் எத்தனை கூச்சம்
உன்னோடு உரிமையை கண்டப்பின் எத்தனை உவகை
உனக்கென நானும் எனக்கென நீயும் இருந்த நாட்களில் எத்தனை கர்வம்
உன் சோகங்களில் பங்கு கொண்ட எனக்குள் எத்தனை பொறுப்பு
உன்னை இன்னொருத்தி கையில் பிடித்து தரும் தருணத்தில் எத்தனை உணர்ச்சி போராட்டம்
உன் எதிர்காலத்தை எண்ணி கண்ட கனவில் எத்தனை எதிர்பார்ப்புகள்
நண்பனே, புகுந்த வீட்டிற்கு பெண்ணை அனுப்பிய பெற்றோர் போல
உன்னை இன்னொரு பெண்ணின் கையில் பிடித்து கொடுத்த என் மனதில் சுகமான வலி ஏற்றம்
இதுதான் விதி நமக்கு தந்த ஏமாற்றம் ..
இனி நீ, உன் மனைவி , உன் குடும்பம் , உன் உலகம்
அந்த உலகத்தில் நான் !
அன்றோ உன் உலகமாய் நான் !
அதீத அன்பிற்கெல்லாம் முற்றுபுள்ளி இப்படியா அமைய வேண்டும் ?
இருப்பினும் கர்வம் கொள்கிறேன்
உன் மகளின் பெயர் என் பெயரென்று தெரிந்ததும் !
{kunena_discuss:779}