(Reading time: 1 - 2 minutes)

உன் மகளாய் நானோ ? - புவனேஸ்வரி 

Gift

மழை நின்றபின் துளி தாங்கும் இலையை போல

நீ சென்றதும் உன் நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாய் தாங்குகிறேன்

 

உன்னுடன் சேர்ந்திட தான் எத்தனை தடைகள்

உன்னிடம் முதல் முறை பேசிடத்தான் எத்தனை தயக்கம்

 

உன் அறிமுகம் பெற்றப்பின் எத்தனை கூச்சம்

உன்னோடு உரிமையை கண்டப்பின் எத்தனை உவகை

 

உனக்கென நானும் எனக்கென நீயும் இருந்த நாட்களில் எத்தனை கர்வம்

உன் சோகங்களில் பங்கு கொண்ட எனக்குள் எத்தனை பொறுப்பு

 

உன்னை இன்னொருத்தி கையில் பிடித்து தரும் தருணத்தில் எத்தனை உணர்ச்சி போராட்டம்

உன் எதிர்காலத்தை எண்ணி கண்ட கனவில் எத்தனை எதிர்பார்ப்புகள்

 

நண்பனே, புகுந்த வீட்டிற்கு பெண்ணை அனுப்பிய பெற்றோர் போல

உன்னை இன்னொரு பெண்ணின் கையில் பிடித்து கொடுத்த என் மனதில் சுகமான வலி ஏற்றம்

 

இதுதான் விதி நமக்கு தந்த ஏமாற்றம் ..

இனி நீ, உன் மனைவி , உன் குடும்பம் , உன் உலகம்

அந்த உலகத்தில் நான் !

 

அன்றோ உன் உலகமாய் நான் !

அதீத அன்பிற்கெல்லாம் முற்றுபுள்ளி இப்படியா அமைய வேண்டும் ?

இருப்பினும் கர்வம் கொள்கிறேன்

உன் மகளின் பெயர் என் பெயரென்று தெரிந்ததும்  !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.