கலியுக பிரம்மாக்கள் - புவனேஸ்வரி
என்னவனே,
பிரம்மன் நயவஞ்சகன் தான்,
சேர முடியாத தூரத்தில் நம்மை நிறுத்தி விட்டான்!
இணைந்திட வழி இல்லாமல் தவிக்க விட்டான் !
உன்னை இன்னொருத்தியின் மணாளனாய்
நிறுத்தி என்னை சோதிக்கவும் அவன் தயங்க மாட்டான்
இதை நான் அறிவேன்..!
தவிக்கின்றேன்,
துடிக்கின்றேன்,
திணறுகின்றேன்,
இருப்பினும் வாழ்கிறேன் !
பூமியில் அவதரித்து பேனாவை கையிலெடுத்த
பிரம்மாக்களின் கருணையினால்..!
எத்தனை புத்தகங்கள்
அதில் எத்தனை களங்கள்
அதில் எத்தனை கஷ்டங்கள்
இருப்பினும் சேர்ந்து விடுகிறோம்
அவர்களின் கற்பனையில்..
ஆம்,
நீ மருத்துவன் என்றால்
நான் உன் நோயாளி
நீ உளவியல் நிபுணர் என்றால்
நான் பித்து பிடித்தவள்
நீ பணம் படைத்த இளவரசன் என்றால்
நான் மிடில் க்லாஸ் இளவரசி
நீ போலிஸ் என்றால்
நான் உன் இதயம் திருடியவள்
நீ அவசர குடுக்கை என்றால்
நான் உனக்கு பிடிக்காத பொண்டாட்டி
நீ நண்பன் என்றால்
நான் உன் ரகசிய ஒருதலை காதலி
நீ சிடுமூஞ்சி என்றால்
நான் உன் ஹா ஹா ஹாசினி
நீ கடுவன் பூனை என்றால்
நான் உனை சீண்டும் எலி
நீ வளர்ந்து கெட்டவன் என்றால்
நான் உன் குள்ளச்சி
நீ மாமன் மகன் என்றால்
நான் உன் அத்தை மகள்
நீ முதலாளி என்றால்
நான் உன் பீ ஏ
நீ கலகலப்பானவன் என்றால்
நான் இறுகி போனவள்
நீ குற்றவாளி என்றால்
நான் உனை மாற்றிடும் மனசாட்சி
நீ பெண் பித்தன் என்றால்
நான் உனை ராமனாக்கிடும் சீதை
நீ மனைவி இழந்தவன் என்றால்
நான் உன் மறுதுணைவி
நீ விவசாயி என்றால்
நான் சிக்கமான மனையாள்
மொத்தத்தில் கதாநாயகனாய் என் கற்பனையில்
உன் உருவம் தோன்றும் போதெல்லாம்
நான் உனக்கானவளாய் தோன்றி
உன்னுடன் வாழ்ந்து விடுகிறேன்.
விதி ஒரு முறை நம்மை பிரிக்க,
கதைகள் ஓராயிரம் முறை நம்மை இணைத்து ரசிக்கின்றன!
மண்ணை தொட்டேன், ஒரு வாழ்க்கை
புத்தகங்கள் தொட்டேன், கணக்கில்லா
தொலைதூர பயணம்..
கோடி நன்றிகள்,
நம்மை சேர்ந்த கலியுக பிரம்மாக்களுக்கு!
{kunena_discuss:779}