கவிதை - பெண் எனும் பேய்! - புவனேஸ்வரி
கவலைகள் எனும் சாத்தானை
இருதய கூட்டுக்குள்
ஆணியால் ஓங்கி அடித்துவிட்டு
தெய்வீக சிரிப்புடன் வலம்வரும் சுந்தரி அவள்!
உள்ளுக்குள் கவலைகளின் ஆக்ரோஷம்,
வெளியில் சந்தோஷத்தின் துள்ளாட்டம,
இரண்டிற்குள்ளும் தொலைந்து போகாமல்
தன்னையே காவல் காக்கும் பைரவி அவள்!
ஒரு பக்கம் அரிதாரம்,
ஒரு பக்கம் அநியாயம்,
இரண்டிலும் பெண்மை சீரழியாமலிருக்க,
ஆணைப் போல பாவனை
தரித்த அர்த்தநாரீஸ்வரி அவள்!
மென்னகை புரிந்து உள்ளம் கிள்ளாமல்,
கலகலப்பில் கண்ணில் வெள்ளம் காணாமல்,
மனதிற்குள் ஒத்திகைபார்த்துவிட்டு
தாளத்திற்கேற்ப நர்த்தனமிடும் நர்த்தகி அவள்!
விதிமுறைகள் ஆயிரம் போட்டு,
விரைப்பாய் தூரம் ஒன்று,
ஏதோ ஓர் நொடியில் மொத்தமாய் உடைந்துவிடின்,
உயிரையும் கொடுத்து உடன்வாழ தவிக்கும்,
பெண் எனும் காதல்பேய் அவள்!
{kunena_discuss:779}