கவிதை - நான் இருந்தாலென்ன, இறந்தாலென்ன? - புவனேஸ்வரி
அன்புடன் என்று தொடங்கினேன்!
அன்பு இருக்கிறதா என்று கேள்வி வந்தது!
நலமா என்று ஆரம்பித்தேன்!
நக்கலா என்று குற்றச்சாட்டு வந்தது!
கனவிலும் வந்தாய் என மொழிய நினைத்தேன்!
கண் இன்றுதான் தெரிந்ததா என்று பார்வை குத்தியது!
என்னுடன் இரு என்று வந்தேன்!
என்னிடத்தில் வேறொரு உறவும்வந்தது!
இனி உன் வாழ்வினில்,
நான் இருந்தாலென்ன இறந்தாலென்ன?
எள்ளி நகைத்தவிதியை,
எட்டி மிதித்துவிட்டு,
ஆகாயம் போல தொடமுடியா தூரம் நின்றேன்,
உன்னை இமைக்காமல் ரசிப்பதற்கு!
{kunena_discuss:779}