கவிதை - நான் இருந்தாலென்ன, இறந்தாலென்ன? - புவனேஸ்வரி
பின்னாலிருந்து கட்டி அணைப்பதும்
முத்தங்களால் கன்னத்தில் எச்சில் செய்வதும்
தன் உதட்டு சோற்றை எனக்கு அளிப்பதும்
என்னை அடிக்கடி சேலை மாற்ற வைப்பதும்
கழுத்தில் முகத்தை அழுத்தி புதைப்பதும்
மடியில் கவிழ்ந்து காவியம் பேசுவதும்
துடிதுடிப்புடன் உளறி கொட்டுவதும்
கள்ள பார்வையில் கிறங்கடிப்பதும்
முப்பொழுதும் எனக்கு மோட்சம் கொடுத்திட
அவனைப்போல மகள் ஒருத்தி வேண்டும்!
{kunena_discuss:779}