புத்தாண்டு 2020 ஸ்பெஷல் கவிதை - அற்புதம் நிகழுமோ? அதிசயம்தான் நடக்குமோ? - தங்கமணி சுவாமினாதன்
நேற்றிரவு உலகம்..
காத்திருந்த வேளையிலே..
நடு இரவு நேரம்..மணி..
பணிரெண்டு ஆகையிலே..
கடிகார முள்ளிரெண்டும்..
சங்கமித்த நொடியினிலே.
புத்தாண்டு பிறந்ததம்மா..
இரண்டாயிரத்திருபதென்ற..
பெயர்தனையும் பெற்றதம்மா..
புத்தாண்டே வருக..உலகிற்கு..
வளங்கள் பல தருக..
வந்து சென்ற வருடங்கள்..
தந்து சென்ற பாடங்கள்..
இனிப்பா..கசப்பாவென..
சீராய்வு செய்திட்டால்..
கசப்பின் விழுக்காடு...
விஞ்சி நிற்பது கண்கூடு..
இயற்கைச் சீற்றங்கள்..
பருநிலை மாற்றங்கள்..
நாடுகளுக்கிடையேதான்..
நட்பில்லாக் கருத்துக்கள்..
ஆயுதங்கள் அணிவகுக்க..
போர்புரிய ஆயத்தங்கள்..
அமைதியற்ற சூழ்நிலையால்..
அவதியுறும் மனிதயினம்..
நம்நாட்டின் நிலைசொன்னால்..
கந்தலாகும் நம் கதைதான்..
தினம்தினம் அரங்கேறும்..
அரசியல் நாடகம்தான்..
அசிங்கத்தின் அருவறுப்பை..
அறுவடை செய்யுதம்மா..
அரசியல்வாதிகளின்..
அடாவடி செயல்களினால்..
தாய்நாட்டு வளங்களெல்லாம்..
அந்நிய நாடுகளில்.. முதலீடு ஆகுதம்மா..
போலிச் சாமியார்கள்..
போடுகின்ற ஆட்டத்திலே..
நாடே சிரிக்குதம்மா..
அந்த சாமியும் தவிக்குதம்மா..
இதுபோன்ற கொடுமையெலாம்..
இனிமேலும் ஆகாது..
பிறந்திருக்கும் புத்தாண்டே..
இனியனைத்தும் உன்கையில்..
அரசியல் வேசிகளின்..
தலைமுறைகள் நசியட்டும்..
ஆட்டம்போடும் சாமியார்கள்..
அறத்தால் அழியட்டும்..
இனியுமொரு 'நிர்பயா'..
உருவாகாது போகட்டும்..
ஜியெஸ்டி வரிகளெல்லாம்..
நீர்த்தேதான் போகட்டும்..
சராசரி மனிதருக்கும்...வாழ்க்கை..
சுகமானதாகட்டும்..
திருட்டு கொலை வன்புணர்வு..
உலகில்...இல்லாது போகட்டும்..
அற்புதம் நிகழுமோ?..
அதிசயம்தான் நடக்குமோ?..
தேர்தல் சூதாட்டம்..
நடக்கின்ற வேளையில்..
வாக்காளர் அறியாமை..
அகன்றேதான் போகுமோ?அன்றி..
பாட்டிலும் பிரியாணியும் நோட்டும்..
பாமரமக்களின்.. ஓட்டாக மாறுமோ?
புத்தாண்டே இன்று முதல்..
பாரததேசமெங்கும்..
புத்தொளி வீசட்டும்..
இளைய சமுதாயம்..
ஏற்றங்கள் காணட்டும்..
மாய சினிமாவும் சூதாட்ட விளையாட்டும்
கொடுக்கும் தீவினைகள்..
விட்டொழிந்து போகட்டும்..
அகில உலகமெங்கும்..
அமைதியே நிலவட்டும்..
புத்தம்புது வசந்தம்..
பூமியெங்கும் பரவட்டும்..
எல்லோரும் எல்லாமும்..
பெற்றேதான் வாழட்டும்.
அன்புக்குரிய அனைவர்க்கும் இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வாழ்க என்றும் வளமோடு