அம்மா.. - தங்கமணி சுவாமினாதன்
அம்மா..நீ என்னை உன் கருவில் சுமந்தபோது...
என் ஊன் வளர நீ உணவுண்டாய்....
என் உயிர் நிலைக்க நீயே சுவாசித்தாய்...
ஆனால் நீ இன்று.....
காற்றுப் புகா கல்லறையில்....
உணவின்றி உறங்குகின்றாய்..
உன் மகன் நான் ஏதும் செய்ய ஏலாமல்..
அம்மா நீ மீண்டும் வந்து பிறப்பாயா?
அனைவர்க்கும் பொதுவான ஆண்டவனே..
நான் ஆணென்றாலும் எனெக்குமொரு..
கருப்பை தாயேன்...
என் தாயை நான் கருவாய்ச் சுமக்க.....