கவிதை - புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்... - தங்கமணி சுவாமினாதன்
நடு இரவில் பிறந்தது புத்தாண்டு..
வளம் பல தரவேண்டும் இவ்வாண்டு..
கடந்த வருடம் பெற்ற அனுபவங்கள்..
இனி வேண்டாம் போகட்டும் திரும்பாது..
பிறந்திருக்கும் நல்லாண்டாம் இவ்வாண்டில்.
அரசியல் சதுரங்கம் ஆடும் கயவர்கள்..
அடியோடு ஒழியட்டும்..காணாமல் போகட்டும்..
கருப்புப்பண முதலைகளைக் காலன் விழுங்கட்டும்..
கலப்படம் செய்வோரும்,லஞ்சம் பெறுவோரும்..
நீதிதேவன் காலடியில் மிதிபட்டு நசுங்கட்டும்..
நதி நீர் தாவாக்கள் தவிடுபொடியாகட்டும்..
தமிழகத்துக் காவிரியில் தண்ணீர் (பொங்கிப்) பெருகட்டும்..
வேளாண் உற்பத்தி பல்கிப் பெருகட்டும்..
விவசாயி கண்களில் ஆனந்தக் கண்ணீர்..
அருவியென வழியட்டும் அவன் வாழ்வு சிறக்கட்டும்..
வெண்மைப் புரட்சி,நீலப்புரட்சி,பசுமைப்புரட்சி என..
வளம்தரும் புரட்சிகள் தமிழகத்தைத் தரணியிலே..
தலை நிமிரச் செய்யட்டும்..தன்னிறைவு அடையட்டும்..
இயற்கையன்னை தன் கோபத்தை இனி காட்டாதிருக்கட்டும்..
மரங்களைச் சாய்த்தழிக்கும் பெரும் புயல் இனி வேண்டாம்..
தெம்மாங்கு இசை பாடும் தென்றலே இனி போதும்..
காட்டாற்று வெள்ளமாய் வந்தெம்மை அலைக்கழிக்கும்..
பேயாய்ப் பொழியும்.. ஆழி மழை இனி வேண்டாம்..
மும்மாரி பொழியும் அளவான மழை போதும்..
அகிலம் முழுதுமினி அமைதியே நிலவட்டும்..
பசியின்றி ஜீவன்கள் பாரினில் வாழட்டும்..
பாசமும் நேசமும்(மனித) மனங்களில் நிறையட்டும்..
பெண்கள் பூமியிலே சமத்துவமாய் வாழ்ந்திடவே..
அனைத்து உரிமைகளும் சுயமாய்க் கிடைக்கட்டும்..
நினைவில் நினைத்திட்ட நினைவுகள் இவையனைத்தும்..
நிஜத்தில் நிஜமாகி நிலைத்து நிற்கட்டும்..
இவ்வாண்டு தொடங்கி இனி வருமாண்டு அனைத்திலுமே..
வளமே பெருகட்டும்..வாழ்க்கை இனிக்கட்டும்..
நமதருமை "சில்ஸீ"யோடு நாமும் இணைந்து இன்று
உலகத்து மாந்தர்க்கெல்லாம் "Happy New Year" என்று
வாருங்கள் தோழியரே வாழ்த்தொலி எழுப்பிடுவொம்.
அனைவர்க்கும் எனது "ஹேப்பி ந்யூ இயர்" நல் வாழ்த்துக்கள். நன்றி...
{kunena_discuss:779}