கவிதை - வாங்க..வாங்க...பட்டம் வாங்க... - தங்கமணி சுவாமினாதன்
ஹ..ஹ..ஹா..வாங்க.. வாங்க..
AF(April Fool)...
பட்டம் வாங்க அழைத்ததும் மறுக்காமல்
வந்து மேற்கண்ட பட்டத்தைப் பெற்றுக்
கொண்ட அன்புள்ளம் கொண்டீரே..
இப்பட்டம் வாங்க...
பள்ளிக்குச் செல்ல வேண்டாம்...
"மூட்டை" புத்தகத்தை முதுகில்--
சுமக்கவேண்டாம்..
பாடம் படிக்க வேண்டாம்..
ஏட்டில் எழுத வேண்டாம்..
கூட்டிக்கழித்துப் பெருக்கிவகுத்து..
புரியாக்கணக்கால் மண்டை--
காய வேண்டாம்..
எக்ஸாம் எழுத வேண்டாம்..
தேர்வு முடிவினை.. எண்ணிஎண்ணிக்..
கலங்க வேண்டாம்..
கல்லூரிக்கும் செல்ல வேண்டாம்..
கம்ப்யூட்டரும் பயில வேண்டாம்..
ஏப்ரல் மாதம் முதலாம் தேதி..
அறிந்தவர் தெரிந்தவர்...
உற்றவர் மற்றவர் யாரிடமாவது..
"பல்ப்" வாங்க..
"April Fool" பட்டம் தானாய்...
வந்து சேருமே..அழகு முகத்தை..
அசட்டுக்களை.. மேலும்அழகூட்டுமே..
அன்புள்ளம் கொண்டீரே..
இப்பக்கம்... பட்டம் வாங்க வந்து..
(ஏமாந்து)"பல்ப்" வாங்கிக் கொண்டீரோ?...
பல்ப் வாங்கியதால் நீங்களின்று..
"AF"பட்டம் பெற்றீரோ?
பட்டம் பெற்ற உம்மை வாழ்த்த..
வார்த்தைகள் ஏதும் இல்லையே...
மொக்கைக் கவிதை எழுதிய என்மேல்..
கோபம் வேண்டாம் தோழியே.
சும்மா வேடிக்கைக்காக எழுனேன்.தவறாக நினைக்க வேண்டாம்.ப்ளீஸ் கூல்.
நன்றி...
{kunena_discuss:779}