(Reading time: 1 minute)

வாசம் - அமீர்

newborn

மனதைவிட்டு மறையாத
மழைநேர 
மண்வாசனை...

என்றும் மறக்க முடியாத
பால் கொடுத்த தாயின்
மார் வாசனை...

தாலாட்டு இன்றி தூங்கிய 
தூளியான
தந்தையின்
தோள் வாசனை...

சலிக்காமல்
கட்டிப்பிடித்து
சண்டையிட்ட
சகோதரன் வாசனை...

திரும்ப திரும்ப அழைத்த
மனைவியின் 
முந்தானை வாசனை...

விரும்பிய
ரோஜா
மல்லி
சம்பங்கி
சந்தண வாசனைகள்...

யாவுமின்று
எனக்கு
அடுத்தபட்ச வாசமானது
என்னவள் ஈன்ற
என் சேயை
மருத்துவச்சி
என் கையில் தந்தபோது 
வீசிய பிறந்தகுழந்தையின்
ஈரமான 
பச்சை வாசத்தால்!

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.