மே - 16 - அமீர்
வெண் சட்டை வேந்தர்
வராரடா...
விண் முட்டும் பொய் சொல்வார்
உஷாரடா!
இவர்
நினைத்ததை வென்று
எதிர்ப்பதை கொன்று
வாழும் நச்சுக் கொளவி!
வளைத்ததை விழுங்கி
வளத்தையும் முழுங்கி
வீரு கொள்ளும்
அரசியல் கிருமி!
பஞ்சையாய் பிறந்து
மன்னராய் வளர்ந்து
பத்து ஊரை பறித்து
பறித்ததெல்லாம் தின்று
கும்பகர்ணனை வென்று
மீண்டும் வருகிறார்
மேடை ஏறி!
நான் அப்பழுக்கில்லா
பசும்பொன் தங்கம்...
தப்பை தட்டிகேட்கும்
அஞ்சாத சிங்கம்...
ஏழை ஏறும் ஏணி...
வறுமை ஆற்றை
கடத்தும் தோனி...
என்றெல்லாம்
நெஞ்சார பொய்யுரைக்கும்
நஞ்சான சாரை!
தன் ஜாதி கூட்டமும்
தன் பொஞ்சாதி பிள்ளைகளும்
சாதகம் பெற
ஜாதகம் பார்க்கும்
மேதகு மனிதர்...
மீண்டும் வருகிறார்
ஓட்டுகள் கேட்டு
உன்னை வேட்டையாடி
இன்னுமொரு மொட்டையடிக்க...
பணம் நாயகனாகும்
இந்த
பரமபத ஆட்டத்தில்
ஜனம் நீ நாயகனாகிட வேண்டாமா?...
ஆண்டியை அரசனாக்கும்
உன் ஓர் வாக்கு
அது
பெரும் செல்வாக்கு
பெற வேண்டாமா?...
வென்றதோடு
வழி மறந்து
தொலைந்துபோன வேதாளங்கள்
மீண்டும்
மரம் ஏறவிடலாமா?...
கடமையை மறந்து
மமதையின் மயக்கத்தில்
நினைவின்றி
உணர்வின்றி
தூங்கி கிடந்ததை
தூக்கியெறி!
{kunena_discuss:779}