நீ எங்கே என் அன்பே - புவனி
நெஞ்சோடு சேர்து வைத்த காதலோடு
உன் உயிரோடு உயிர் சேர்க்க துடித்ததடா
என் உள்ளம் ஆனால்...........
உனக்குள் முழுதாய் என்னை தோற்ற தைரியத்தில் தான்
உன் காதலோடு விளையாட ஆசை கொண்டதடா
இந்த பேதை மனம்..................
ஒவ்வொரு முறையும் உன் விழி பேசும் காதலில்
என்னை கரைத்திடுவேனோ என்ற அச்சத்தில்
எல்லாம் மறைத்து கண்கட்டி விளையாடினேன்
என் காதலோடு உன்னிடத்தில் நான்.................
என் இதயம் வருடும் உன் நினைவோடு
காத்திருந்தேன் என் காதல் சொல்ல ஆனால்
எல்லாம் கானல் நீர் ஆனதடா என் கள்வா
என் உயிர் மறித்து மொழி பறித்தவனே
என்னை ஊமை ஆக்கிவிட்டு எங்கு சென்றாய்
நீ வலிகள் கொடுத்தாலும் அதைக்கூட ஆற
அனுமதிக்காமல் அதிலும் உன் நினைவை மட்டுமே
சுமக்க நினைத்தது தான் என் தவறோ
காலமெல்லாம் காயாத காயங்களை மட்டும்
என்னுள் கொடுத்துவிட்டு எங்கே சென்றாய் நீ
உயிர் வலிக்குதடா உயிரே................
உன் உயிரோடு என் உயிரையும்
கொண்டு செல்லாமல் ஏன் விட்டு சென்றாய்????????
நித்தமும் உந்தன் வருகைக்காக என் வீட்டு ஜன்னலோரம்
காத்து இருக்கிறேன் நான் என் தலையணைக்கு
கொடுக்காமல் மறைத்து வைத்த கண்ணீருடன்
காற்றாக கலந்துவிட்டவனே மீண்டும்
வந்தாயோ என்னிடத்தில்
தீண்டி செல்லும் தென்றலாய்
என் கண்ணீர் துடைக்க……………………
{kunena_discuss:779}