(Reading time: 2 - 3 minutes)

கவிதை - இன்னும் புரியவில்லை - நிலவினி

sad Woman

உன் கனவுகளில் நான் இல்லை.....

பரவாயில்லை.....

உன் நினைவில் கதாபாத்திரமாக கூட 

நானில்லை......

கடக்க வேண்டியவளாக நீ

என்னை நினதை்திருக்கிறாய்....

கடந்து வந்த தருணங்களை.......

மண்ணென புதைத்திருக்கிறாய்.....

யதார்த்தம் என்ற பெயரில் உன் 

தவறுகளுக்கு சாயமிட்டாய்.....

ஆசை ஆத்மார்த்தங்களுக்கு சாபமிட்டாய்......

நேரத்திற்கு ஏற்றார் போல 

நேசங்கொள்ள முடிகிறது உன்னால்......

நெருங்கவதற்கும், நொறுங்குவதற்கும்

நேர கணக்கிட  முடியவில்லை என்னால்.....

எண்ணங்களுக்கு வலிமை உண்டாம்.....

ஆயின்  ஏன்

என் வலிகளைக் கூட அவற்றால் 

உனக்கு சேர்பிக்க முடியவில்லை....?

என் வலிகளும் எனை போல  

பலவீனமானவையா?

நம் சண்டை சமாதனங்களில் 

சமாதனங்களை கணக்கிட்டு நான்

ஆர்பரித்துக்கொண்டிருக்க.....

சத்தமல்லாமல் நீ சண்டகைளை

ஆராய்ந்திருக்கிறாய்.......

சேர்வோம் என்று சொல்லத்தான்

வழியில்லை.....

பிரிகிறேன் என்று சொல்லக்கூடவா 

மொழியில்லை.?..?

உன்னிடம் இவற்றி்க்கெல்லாம் நான்

மன்றாடாவில்லை எனவே

உனக்கு பழியில்லை........

சந்தர்ப்ப மழைகளில் 

சாயம் போன நீ ஒன்றும் காதலுக்கு 

புதிதில்லை.....

நியாயங்கள் பல இருந்தும் உனை ஏன் மறக்கவி்ல்லை

என்பதே இன்னும் புரியவில்லை.......! 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.